Tuesday, October 31, 2017

உயிர்த்தெழுமோ காதல் - கார்த்திகா கார்த்திகேயன்

தலைப்பு : உயிர்த்தெழுமோ காதல்
கதாநாயகன் : ரிஷி நந்தன்
கதாநாயகி   : வேதா

இது ஒரு பேய் + காதல் கதை. அவனை துரத்தி துரத்தி காதல் செய்யும் பேய். அதை மிரட்டி அப்படி செய்யாதே இப்படி செய்யாதே என்று சொல்லும் ரிஷி. கடைசியில் பேயின் காதலை புரிந்து கொள்வானா ? கேள்விக்கு பதில் கதையில்!!!!!!

Read my ongoing story at https://www.mallikamanivannan.com/uyirthezhumo-kaathal-1/

Thursday, October 26, 2017

காதல் சண்டைகள் - கார்த்திகா கார்த்திகேயன்


காதல் சண்டைகள் என்னுடைய ஐந்தாவது கதை. நான் எழுதுவதையும் படிச்சு அதுவும்  என் பேரை தேடி தேடி படிக்கிறேன்னு சொன்ன  என்னோட பிரண்ட்ஸ்க்கு இந்த கதையும் பிடிக்கும்னு நம்புகிறேன். காதல் சண்டையை பார்த்து சிரிக்கலாம் நீங்க

தலைப்பு : காதல் சண்டைகள்
கதாநாயகன் : ரஞ்சித்
கதாநாயகி   : உத்ரா

Read story at https://www.ladyswings.in/community/threads/6272/

காதலை யாசிக்கிறேன் - கார்த்திகா கார்த்திகேயன்


அன்புக்காக  ஏங்கி  தவிக்கும் மீரா  என்ற  ஒரு பெண்ணின் வரலாறு. கணவனின் காதலாவது கடைசியில் கிடைக்குமா என்று காத்திருந்தவளின் நிம்மதியை முதல் நாளிலே கெடுக்கும் கணவன் முகுந்தன்

மீராவுக்கு முகுந்தனின் காதலாவது கிடைக்குமா  அவள்  இழந்த சந்தோசம் அத்தனையும் திருப்பி தருவானா

Read  story at http://www.penmai.com/forums/serial-stories/129720-kaathalai-yaasikkiren-karthika-karthikeyan.html

உண்மை காதல் தோற்று தான் போகுமோ ? - கார்த்திகா கார்த்திகேயன்


தலைப்பு : உண்மை காதல் தோற்று தான் போகுமோ ?
கதாநாயகன் : கார்த்திகேயன்
கதாநாயகி : கைகேயி

இது ஒரு முக்கோண காதல். கார்த்திகேயன் கைகேயியின் மேல் உயிரையே வைத்திருப்பவன் கார்த்திகேயன் இல்லை என்றால் நான் உயிருடனே இருக்க மாட்டேன் என்று சொல்பவள் கைகேயி இவர்களுக்கு இடையில் வருகிறாள் வந்தனா. உண்மை காதல் இந்த உலகத்தில் இல்லை உன் காதலே உண்மை கிடையாது அதை நான் முறித்து காட்டவா என்கிறாள் வந்தனா.

உண்மை காதல் இருக்கு அதுக்கான உயிரையும் குடுப்பவர்கள் இருக்கிறார்கள் காதலுக்கு போராட்டம் வந்தாலும்  உண்மை காதல் ஜெயிக்கும் என் காதலை உன்னால் மட்டும் இல்லை யாராலும் பிரிக்க முடியாது நீ முயற்சி செய்  என்று வாதாடுகிறாள் கைகேயி. இத்தனைக்கும் வந்தனாவும் கைகேயியும் உயிர் தோழிகள் கடைசியில் காதல் தோற்காமல் இருக்குமா இவர்களின் நட்பு கடைசி வரை நீடிக்குமா  பார்ப்போம்

நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - கார்த்திகா கார்த்திகேயன்

Title: நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள்
Type: காதல் தொடர் கதை
Author: கார்த்திகா கார்த்திகேயன்

Read full story at https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nenchathil-pathintha-kadhalin-suvadugal

எனக்காக திறந்து விடு உன் இதய கதவை - கார்த்திகா கார்த்திகேயன்


என்னுடைய கதையின் தலைப்பு :  எனக்காக  திறந்து விடு உன் இதய கதவை

நாயகன்:   கௌதம்
ஆண்மைக்கு  இலக்கணமாய் விளங்கும் அழகான சுந்தரன். பொறியியலில்  உயர் படிப்பு  படித்து விட்டு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர். 21 வயதில் பார்த்த ஒரு மங்கையின் நினைவாக இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவன். அவளின் காதலுக்காக காத்திருப்பவன்

நாயகி : தேனிலா
உண்மையான நிலா  இறங்கி கீழே  வந்தால் கூட இவளை போல் அழகாக இருக்குமா என்றால்  தெரியாது. பார்த்த முதல் நாளிலே அவன் மீது காதல் கொண்டு அவனுக்காக  தவிக்கும் பொறியியல்  கல்லூரி  மாணவி.
இருவர் காதலும் கை கூடுமா?

இருவருக்கும் தனி தனி காதல். இவர்களின்  காதல் நிறை வேறுமா  இல்லை அவர்களுடைய ஒரு தலை காதலை நினைத்து கொண்டே வாழ்வார்களா? .....

இது எனது முதல் முயற்சி என்பதால் உங்களது பின்னூட்டம் மட்டுமே என்னை மென்மேலும் சிறப்பாக எழுத உதவும்.எனவே உங்களது நிறை,குறை எதுவாக இருப்பினும் தயவுசெய்து கூறுங்கள் தோழிகளே.....

அன்புடன்
கார்த்திகா கார்த்திகேயன்